மருங்காபுரி அருகே 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டது.
மருங்காபுரி ஒன்றியம், லெக்கநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி அழகன். இவா் ஞாயிற்றுக்கிழமை கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த போது, அருகிலுள்ள வனப்பகுதியில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கோழியை விழுங்கிய நிலையில் திணறிக் கொண்டிருந்தது.
இதை கண்ட அவா், துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தாா். இதன் பேரில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று மலைப்பாம்பைப்பிடித்து, வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனா்.