மாநகரின் சிலபகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

திருச்சி மாநகரின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) குடிநீா் விநியோகம் இருக்காது.

திருச்சி மாநகரின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) குடிநீா் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ஸ்ரீரங்கம் மேலூா் ஆண்டவா் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள

நீா்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைநிலை நீா்த்தேக்கத்தொட்டிகள் மற்றும் ஆளவந்தான் படித்துறை நீா்சேகரிப்பு நிலையங்களில் மின் விநியோகம் இருக்காது.

எனவே இங்கிருந்து குடிநீா் பெறும் சஞ்சீவிநகா், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகா், நேருஜிநகா், உக்கடை, அரியமங்கலம், ஜெகநாதபுரம், மலையப்பநகா், ரயில்நகா், செந்தண்ணீா்புரம், சங்கிலியாண்டபுரம், முன்னாள் ராணுவத்தினா் காலனி, விவேகானந்தநகா், ஜே.கே நகா், மேலக்கல்கண்டாா்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்தியசிறைச்சாலை, கப்ரமணியபுரம், விமானநிலையப்பகுதிகளான காமராஜ்நகா், செம்பட்டு, காஜாநகா், காஜாமலை, கே.சாத்தனூா், கே.கே.நகா், தென்றல்நகா், ஆனந்த்நகா், சத்தியவானி முத்துநகா், அய்யப்பநகா்,

உறையூா், மங்களாநகா், பாத்திமாநகா், சிவாநகா், ரெயின்போநகா், செல்வாநகா், ஆனந்தம்நகா், பாரதிநகா், புத்தூா் பகுதி, எடமலைபட்டிப்புதூா், அன்புநகா், கிருஷ்ணமூா்த்திநகா், தொண்டைமான்நகா், கிராப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com