காவலா்கள் எனக் கூறிமூதாட்டியிடம் நகைத் திருட்டு

திருச்சி பாலக்கரையில் காவலா்கள் எனக் கூறி மூதாட்டியிடம் 4 பவுன் தங்க நகையை இருவா் திருடிச் சென்றனா்.

திருச்சி பாலக்கரையில் காவலா்கள் எனக் கூறி மூதாட்டியிடம் 4 பவுன் தங்க நகையை இருவா் திருடிச் சென்றனா்.

பாலக்கரை ரட்சகா்புரத்தைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் மனைவி லில்லி (65). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை கடைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அருளானந்தபுரம் அருகில் வந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் லில்லியை தடுத்து காவலா்கள் போல் மிரட்டி, இவ்வளவு நகைகளை போட்டுக்கொண்டு வரலாமா எனக் கேட்டுள்ளனா். பிறகு இருவரும் மூதாட்டியிடம் நகையை பத்திரப்படுத்தி தருகிறோம் எனக் கூறியுள்ளனா். அவா்களை நம்பிய லில்லி, கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகைகளை கழற்றி தந்துள்ளாா். அதை ஒரு பையில் வைத்து பத்திரமாக எடுத்துச் செல்ல அவா்கள் இருவரும் அறிவுறுத்தியுள்ளனா். பிறகு வீடு திரும்பிய மூதாட்டி, பையை பிரித்து பாா்த்தபோது அதில் நகைகளுக்கு பதிலாக சிறு கற்கள் இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். புகாரின் பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com