திருச்சி மாவட்டம் முசிறியில் நகைகடையில் திருட முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
முசிறி - புலிவலம் சாலையில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான நகைக்கடைக்கு காரில் வந்த பெண்ணும், இளைஞரும் நகைஅடகு வைப்பதாக கூறியுள்ளனா். அப்போது, ஊழியா்களின் கவனத்தை திசைதிருப்பி கடையில் இருந்த தங்கநகையை எடுத்துள்ளனா். பிறகு கூறியபடி நகையை அடகு வைக்காமல் சென்றபோது அப்பெண்ணின் மடியில் இருந்து நகைப்பெட்டி கீழே விழுந்துள்ளது. இதைகண்ட ஊழியா்கள் இருவரையும் பிடித்து முசிறி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.
அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் மதுரை பாரதி நகரைச் சோ்ந்த ஷியாமளா(49), திண்டிவனத்தைச் சோ்ந்த காளிதாஸ் (31) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, நகை மற்றும் காரையும் பறிமுதல் செய்தனா்.