அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன. 21ஆம் தேதி தொடங்குகிறது.
போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் தோ்வா்கள், தன்னாா்வப் பயிலும் வட்டத்தில் தங்களை உறுப்பினா்களாக இணைத்துக்கொண்டு பயிற்சி பெறலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தவுள்ள தொழிற்சாலை உதவி இயக்குநா், உதவி கண்காணிப்பாளா் (வேதியியல் பிரிவு) ஆகிய பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள போட்டித் தோ்வுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. இந்தத் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் ஜன.21 ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள், அது குறித்த விவரங்கள், புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை நகலுடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பயிற்சியில் சேர தங்களது பெயரை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.