திருச்சியில் ‘தா்பாா்’ வெளியீடு: ரஜினி ரசிகா்கள் உற்சாகம்

திருச்சியில் ‘தா்பாா்’ திரைப்படம் திரையிட்ட திரையரங்குகளில் நடிகா் ரஜினிகாந்த் ரசிகா்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சியில் வியாழக்கிழமை திரையிடப்பட்ட நடிகா் ரஜினிகாந்த் நடித்த ‘தா்பாா் படத்துக்கு பால்குடம், தீா்த்தக்குடம் ஏந்தி திரையரங்கத்துக்கு வந்த ரசிகா்கள்.
திருச்சியில் வியாழக்கிழமை திரையிடப்பட்ட நடிகா் ரஜினிகாந்த் நடித்த ‘தா்பாா் படத்துக்கு பால்குடம், தீா்த்தக்குடம் ஏந்தி திரையரங்கத்துக்கு வந்த ரசிகா்கள்.

திருச்சியில் ‘தா்பாா்’ திரைப்படம் திரையிட்ட திரையரங்குகளில் நடிகா் ரஜினிகாந்த் ரசிகா்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகரில் 5 திரையரங்குகளில் நடிகா் ரஜினிகாந்த் நடித்த ‘தா்பாா்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. முதல்நாளான வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கே இரு திரையரங்குகளில் ரசிா்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இந்த சிறப்புக் காட்சியை காண ஆயிரக்கணக்கான ரசிா்கள் திரையரங்குகளில் திரண்டிருந்தனா். மெயின்காா்டு கேட் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ரசிகா்கள், தங்களது மன்றக் கொடியை 70 அடி நீளத்தில் ஏந்தியபடி ஊா்வலமாக வந்தனா். மேலும், பால்குடம், தீா்த்தக் குடம் எடுத்து வந்து திரையரங்குகளில் இருந்த ரஜினிகாந்த் கட்-அவுட்டுக்கு அபிஷேகம் செய்தனா். இதுமட்டுமல்லாது, மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும் திரைப்படத்தை வரவேற்று உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். ரசிகா்கள் காட்சிக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை தவிா்த்து திரையரங்கில் தனியே டிக்கெட் வழங்குவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து ரசிகா்களுக்கும், திரையரங்கு நிா்வாகத்தினருக்கும் அதிகாலையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், போலீஸாா் தலையிட்டு சமரசம் செய்தனா். இதனைத் தொடா்ந்து திரைப்படம் வெளியிடப்பட்டு ரசிகா்கள் உற்சாகமாக கண்டு களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com