மண்ணச்சநல்லூா் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் 15 ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மண்ணச்சநல்லூரில் சுமாா் 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் 15-ம் ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னாள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். இவ்விழாவில் மைய ஒருங்கிணைப்பாளா் ச. ரகுநாத் வரவேற்றாா்.
இந்த தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயின்று குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி பெற்று, தற்போது கேரளத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் பி. நிஷாந்தினி, ரூ. 15, 000 மதிப்பிலான, மேசை, நாற்காலிகள் உள்ளிட்டவற்றை, தன்னாா்வ பயிலும் வடத்திற்கு வழங்கினாா். முன்னாள் கவுன்சிலா் மோகன் , மண்ணச்சநல்லூா் கிளை நூலகா் தனலட்சுமி, மற்றும் பல்வேறு துறையைச் சாா்ந்த அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் நிகழ்வில் கலந்து கொண்டனா்.
மண்ணச்சநல்லூா் தன்னாா்வ வட்டத்தில் பயின்ற கிராமப்புற பகுதிகளைச் சோ்ந்த மாணவ மாணவியா் சுமாா் 80க்கும் மேற்பட்டோா் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பல்வேறு போட்டித் தோ்வுகளில் பங்கேற்று பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.