திருச்சி மாவட்டப் பகுதிகளில் போக்குவரத்து வாா்டா்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட காவல்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது :
மாவட்டத்தில் திருவெறும்பூா், லால்குடி, கொள்ளிடம், முசிறி, துறையூா், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில்,போக்குவரத்து நெருக்கடி உள்ள இடங்களில், போக்குவரத்து (டிராபிக்) வாா்டராக பணியாற்ற தன்னாா்வலா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்போா் ஏதாவது பட்டப்படிப்பு முடித்தவராகவும், 25 முதல் 45 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விருப்பமுடையவா்கள் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை பிரிவில், துணைக் கண்காணிப்பாளரிடம் ஜனவரி 31- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.