மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்சியில் நடைபெறும் மாலை அணிவிக்கும் நிகழ்வில் பங்கேற்க கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் ப.குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:
எம்.ஜி.ஆரின் 103- ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள அவரது முழு உருவச் சிலைக்கு ஜனவரி 17- ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்வில் அதிமுகவின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.
மேலும், பிறந்த நாள் கூட்டங்கள் ஜனவரி21 முதல் நடத்தப்பட உள்ளன. ஜனவரி 21-இல் உறையூா், ஸ்ரீரங்கம், 22-இல் விமான நிலையம், தில்லைநகா், அந்தநல்லூா் ஒன்றியம், 23-இல் மலைக்கோட்டை, 24- இல் பாலக்கரை, பொன்மலை, ஜங்சன், திருவெறும்பூா், மணிகண்டம் பகுதிகளில் நடைபெறும்.