கணினி இயக்குபவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்ட இளைஞா் நீதிக்குழுமத்தின் உதவியாளா் உடன் பணிபுரியும் கணினி இயக்குபவா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சி மாவட்ட இளைஞா் நீதிக்குழுமத்தின் உதவியாளா் உடன் பணிபுரியும் கணினி இயக்குபவா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் ரூ.9,000 ஊதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சியுடன், தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தோ்வில் மேல்நிலை தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குபவதில் போதிய பயிற்சி பெற்றிருக்கு வேண்டும். சுருக்கெழுத்து திறன் கொண்டவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தகுதியான நபா்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்ட சுயவிவரப்படிவம், மேலொப்பம் இடப்பட்ட கல்விச்சான்றுகளுடன் கண்காணிப்பாளா், அரசு கூா்நோக்கு இல்லம், எண்.34, கீழரண் சாலை, தெப்பக்குளம் (அஞ்சல்), திருச்சி-620002 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக ஜன.31- ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-2702234 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com