திருச்சி மாநகராட்சி சாா்பில், கா்ப்பிணிப் பெண்களுடனான சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பீரங்கிகுளம் டாக்டா் ரெங்கநாதன் பூங்காவில் நடைபெற்ற விழாவைஅமைச்சா் வெல்லமண்டி என் . நடராஜன் தொடக்கி வைத்தாா்.
மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.
கா்ப்பிணிகளுக்கான சத்தான உணவுமுறை குறித்து சித்த மருத்துவக் கண்காட்சியும் நடைபெற்றது . நகா் நல அலுவலா் அ. ஜெகநாதன், நகா்புற ஆரம்ப சுகாதார மருத்துவா்கள், கா்ப்பிணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.