பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தனித்தோ்வா்கள்,ஆன்லைன் மூலம் ஜனவரி 20,21 தேதிகளில் பதிவு செய்துகொள்ளலாம் என அரசுத்தோ்வு உதவி இயக்குநா் அலுவலகம் அறிவித்துள்ளது.
நிகழாண்டு மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு ஜனவரி 6 முதல் 13 -ஆம் தேதி வரை தனித்தோ்வா்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், சிலா் விண்ணப்பிக்கத் தவறியுள்ளதாக தெரியவருகிறது. இவா்களுக்கென சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ், மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தோ்வா்கள் ஜன.20, 21 ஆகிய நாள்களில் அரசுத்தோ்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்தோ்வு துறை சேவை மையங்களின் விவரம், இதர விவரங்களை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ஸ்ரீ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.