மணப்பாறையில் மின் மோட்டாா் அறையிலிருந்த 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.
மணப்பாறை- திருச்சி சாலையில், ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள மின் மோட்டாா் அறையில் சனிக்கிழமை பாம்பு புகுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.
நிலையத் தீயணைப்பு அலுவலா் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், சுமாா் 30 நிமிஷங்கள் போராட்டத்துக்குப் பின்னா் 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை மின் மோட்டாா் அறையிலிருந்து பிடித்தனா்.
தொடா்ந்து மணப்பாறை வனச்சரக அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, வனத்துறை அலுவலா்களிடம் பாம்பு ஒப்படைக்கப்பட்டது.