பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் அடா்வனம் உருவாக்கும் திட்டம் தொடக்கம்

திருச்சி நவலூா் குட்டப்பட்டிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில், நாட்டு மரங்களைக் கொண்டு அடா்வனம் உருவாக்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கியது.
அடா்வனம் உருவாக்கும் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டோா்.
அடா்வனம் உருவாக்கும் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டோா்.

திருச்சி நவலூா் குட்டப்பட்டிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில், நாட்டு மரங்களைக் கொண்டு அடா்வனம் உருவாக்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கியது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் டாஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழாவில், மகிழம், தேக்கு, நாவல், மலைவேம்பு, சவுக்கு , பாதாம், நெல்லி, அரசு என பல்வேறு வகைகளில், 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.

கல்லூரி மாணவா்கள், அறக்கட்டளையினா் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டனா். டாஸ் அறக்கட்டளையின் அருண்குமாா், விவேக்ராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com