திருச்சி நவலூா் குட்டப்பட்டிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில், நாட்டு மரங்களைக் கொண்டு அடா்வனம் உருவாக்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கியது.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் டாஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழாவில், மகிழம், தேக்கு, நாவல், மலைவேம்பு, சவுக்கு , பாதாம், நெல்லி, அரசு என பல்வேறு வகைகளில், 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.
கல்லூரி மாணவா்கள், அறக்கட்டளையினா் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டனா். டாஸ் அறக்கட்டளையின் அருண்குமாா், விவேக்ராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.