திருச்சியில் கரோனா தொற்று அதிகரிப்பு: மூன்று வார்டுகளில் இன்று இரவு 8 மணி முதல் 14 நாள்களுக்கு வெளியே செல்லத் தடை

திருச்சியில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து 16, 17, 18 ஆகிய 3 வார்டுகளை தனிமைப்படுத்தி, இரவு 8 மணி முதல் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 14 நாள்களுக்கு வெளிப்பகுதிகளுக்கு செல்லத் தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் கரோனா தொற்று அதிகரிப்பு: மூன்று வார்டுகளில் இன்று இரவு 8 மணி முதல் 14 நாள்களுக்கு வெளியே செல்லத் தடை

திருச்சியில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து 16, 17, 18 ஆகிய 3 வார்டுகளை தனிமைப்படுத்தி, இரவு 8 மணி முதல் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 14 நாள்களுக்கு வெளிப்பகுதிகளுக்கு செல்லத் தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாநகரின் முக்கிய கடை வீதிகளான, மாநகராட்சி 16, 17, 18 வார்டுகளுக்கு உட்பட்ட, என் எஸ் பி சாலை, பெரியகடைவீதி, சின்ன கடைவீதி, கம்மாளத்தெரு, குஜிலித்தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகள் மிகவும் நெருக்கமாக உள்ளதால் இப்பகுதிகளில் கரோனா தொற்று எளிதில் பரவி அதிகரித்து வருகிறது. இதனால், இப்பகுதிகளில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக  மாநகராட்சி நிர்வாகம், கரோனா தொற்று அதிகமாக பரவும் இந்த குறிப்பிட்ட 3 வார்டுகளை தனிமைப்படுத்தி 14 நாள்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் கூறுகையில், மாநகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக 16, 17,  18 ஆகிய 3 வார்டுகள் வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கிருந்து யாரும் வெளியே செல்லவோ, வெளி நபர்கள் உள்ளே செல்லவோ  தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 24ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும். குறிப்பாக, மேலரண் சாலையில் ஜபார்ஷா தெரு முதல் பழைய பாஸ்போர்ட் ஆபிஸ் வரையிலும், பெரிய கடைவீதியில் கமான் வளைவு முதல் கள்ளத்தெரு வரையிலும், இவற்றில் உள்ள குறுக்குத்தெருக்களும், தடை செய்யப்பட்டுள்ளன.

இப்பகுதியில் போக்குவரத்துகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களான மளிகை, பால் மற்றும் மகுந்துகடைகள்  மட்டும் திறக்கப்பட்டிருக்கும். மக்கள் நெருக்கம் மிகுந்த இப்பகுதியில் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்டுள்ள இம்முயற்சிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மாநகராட்சியின் இந்த திடீர் அதிரடி முடிவு குறித்து, அப்பகுதி மக்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் தண்டோரா மூலமும், ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகள் மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com