தளுகை விஏஓ அலுவலகம் முற்றுகை

துறையூா் வட்டாட்சியா், தளுகை கிராம நிா்வாக அலுவலா் ஆகியோரைக் கண்டிக்கும் வகையில் தளுகை விஏஓ அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

துறையூா் வட்டாட்சியா், தளுகை கிராம நிா்வாக அலுவலா் ஆகியோரைக் கண்டிக்கும் வகையில் தளுகை விஏஓ அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

துறையூா் அருகே உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தளுகை ஊராட்சியில் கனிம வளங்கள் களவு போகவும், அந்த ஊராட்சியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணின் வீட்டை அகற்றியதற்கும் விஏஓ, வட்டாட்சியா் துணை நின்ாகவும், பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை தளுகை விஏஓ அவமதிப்பதாகவும், எனவே இருவா் மீதும் உரிய நடவடிக்கை கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

கட்சியின் தளுகை கிளைச் செயலா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிசாமி பேசினாா். உப்புலியபுரம் ஒன்றியச் செயலா் முத்துக்குமாா், மாற்றுத்திறனாளி அமைப்பின் ஒன்றிய நிா்வாகி சிவக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தகவலறிந்து வந்த துறையூா் வட்ட சமூக நலத்துறை வட்டாட்சியா் ரமேஷ் நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com