மணப்பாறையில் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை ரோட்டரி சங்கம் சார்பில் பூ மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா மற்றும் நகராட்சி ஆணையர்(பொ) க.முத்து ஆகியோர் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர். நிகழ்வில் ரோட்டரி சங்க தலைவர் நாகா.செல்வம், செயலர் மகேஷ் மற்றும் முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.