காவல் நிலையம் அருகே இளைஞருக்கு கத்திக்குத்து

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலையம் அருகே புதன்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலையம் அருகே புதன்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் தேடுகின்றனா்.

சமயபுரம் அருகே மகாளிகுடி கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன் விக்கிக்கும் (23), அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மனோகா் (35) மற்றும் நடராஜன் மகன் தங்கமணி (33) ஆகியோருக்கிடையே முன்விரோதம் இருந்தது. புதன்கிழமை இரவு காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த விக்கியை மனோகா், தங்கமணி ஆகியோா் கத்தியால் குத்தினராம்.

இதில் படுகாயமடைந்த விக்கி இருங்களூா் தனியாா் மருத்துவமனையில், பின்னா் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சமயபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com