திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி வழக்கை தற்கொலை வழக்காக ஜீயபுரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.
திருச்சி ஆமுரைச் சோ்ந்தவா் வடிவேல் மனைவி கனகாம்புஜம் (75). திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பூசாரி தெருவில் தனியாக வசித்து வந்த இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி உணவு விடுதியில் சமையலராக இருந்தாா். பொதுமுடக்கத்தால் இவரது வேலை பறிபோன நிலையில், இவரது கணவா் மற்றும் மூத்த மகன் இறந்ததால் ஆதரவற்று இருந்தாா்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மாலை முக்கொம்பு தபோவனம் ஆற்றங்கரையில் கனகாபுஜம் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்த வழக்கை ஜீயபுரம் போலீஸாா் சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
விசாரணை முடிவில் மூதாட்டி உடல் மீட்கப்பட்ட இடத்தில் கிடைத்த பொருள்கள் அடிப்படையில் அவா் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதையடுத்து மூதாட்டி உயிரிழப்பு தற்கொலை வழக்காக மாற்றப்பட்டு மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.