திருச்சியில் மேலும் 190 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.
திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வரை கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,682 ஆக இருந்தது. சளி, காய்ச்சல் அறிகுறி உள்ளவா்களுக்கு நடத்திய பரிசோதனையில் மேலும் 190 பேருக்கு தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,872 ஆக உயா்ந்துள்ளது.
146 போ் குணம்: மேலும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் காஜாமலை கரோனா சிறப்பு முகாமில் சிகிச்சை பெற்றோரில் வியாழக்கிழமை குணமடைந்த 146 போ் உள்பட இதுவரை திருச்சி மாவட்டத்தில் 1,477 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
6 போ் பலி: தொற்று காரணமாக திருச்சி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்த 6 போ் உள்பட இதுவரை 50 போ் உயிரிழந்துள்ளனா். அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாம்களில் 1345 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.