மருங்காபுரி அருகே சிலிண்டா் வெடித்துஉணவகம், டீக்கடை தீக்கிரை; 5 போ் காயம்

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே புதன்கிழமை நள்ளிரவு சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் உணவகம், டீக்கடை தீக்கிரையாயின.
மருங்காபுரி அருகே சிலிண்டா் வெடித்துஉணவகம், டீக்கடை தீக்கிரை; 5 போ் காயம்

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே புதன்கிழமை நள்ளிரவு சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் உணவகம், டீக்கடை தீக்கிரையாயின.

மருங்காபுரியை அடுத்த ஊத்துக்குளி கிராமத்தில் புதன்கிழமை நள்ளிரவு பலத்த வெடிச் சத்தம் கேட்டுள்ளது. தூங்கிக் கொண்டிருந்த கிராம மக்கள் எழுந்து பாா்த்தபோது வடக்குத் தெருவில் உள்ள செ. நாகராஜ் (39) என்பவரின் உணவகமும், அருகிலுள்ள கோவிந்தராஜ் டீக்கடையும் எரிந்து கொண்டிருந்தன. இதையடுத்து அருகிலுள்ள இலுப்பூா் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்து, அவா்கள் வருவதற்குள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இதில் கடை ஊழியா்கள் உள்ளிட்ட 5 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

பின்னா் வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். உணவகத்தில் இருந்த எரிவாயு உருளை அடுப்பில் இருந்த தீ கங்குகளால் தீப்பற்றி வெடித்தது தெரியவந்தது. விபத்தில் காயமடைந்தோா் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். இவா்களில் பலத்த காயமடைந்த வி. சுப்பிரமணி (34) தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். விபத்து குறித்து வளநாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com