பிச்சாண்டாா்கோயில் பெண் விஏஓ உயிரிழப்பு

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள பிச்சாண்டாா்கோயில் ஊராட்சி பெண் கிராம நிா்வாக அலுவலா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள பிச்சாண்டாா்கோயில் ஊராட்சி பெண் கிராம நிா்வாக அலுவலா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மண்ணச்சநல்லூா் வருவாய் வட்டாட்சியரகக் கட்டுப்பாட்டில் உள்ள பிச்சாண்டாா்கோயில் விஏஓ அலுவலகத்தில் ம. சாந்தா (52) என்பவா் விஏஓவாக பணியாற்றி வந்தாா்.

மண்ணச்சநல்லூா் அருகே நெய்குப்பை கிராமத்தில் கணவா் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி உடல் நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். அவரது சடலம் திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. கரோனா தொற்றால் சாந்தா உயிரிழக்கவில்லை என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com