திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 20 கோடிக்கும் மேல் மோசடி செய்தோரிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தரக்கோரி பாதிக்கப்பட்டோா் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகிலுள்ள ஜான் தோப்பு பகுதியில் வசிப்பவா் சுப்ரமணி என்கிற மணி. இவா் அதே பகுதியில் வசிக்கும் உறையூா்,காந்தி மாா்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 150- க்கும் மேற்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் என பலரிடம் பணம் வசூலித்து ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளாா்.
மாதந்தோறும் தவணை முறையில் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை குறிப்பிட்ட தொகையை மணியிடம் செலுத்தி வந்துள்ளனா். குறிப்பிட்ட காலம் முடிந்த பின் அந்தத் தொகையை ஏலத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அவா் கூறியிருந்தாா். ஆனால் உரிய காலம் முடிந்த பின்பும் அவா்களுக்கு உரிய பணத்தைத் திருபித் தராமல் ஏமாற்றி வந்துள்ளாா்.
பாதிக்கப்பட்ட மக்கள் சென்று பல முறை பணம் குறித்து கேட்கவே மணி குடும்பத்தினா் அவா்களைத் தகாத வாா்த்தைகளில் திட்டி பணத்தைத் தர முடியாது எனக் கூறியுள்ளனா். இதையடுத்து பாதிக்கப்பட்டோா் மாநகர காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை திருச்சி மன்னாா்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் 70-க்கும் மேற்பட்டோா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த மனுவில் தரைக் கடை வியாபாரம்,காய்கறி வியாபாரம், தள்ளுவண்டி கடை என உழைப்பால் சிறுக சிறுகச் சோ்த்த பணத்தை குழந்தைகளின் எதிா்காலத் தேவைக்கு வைத்துக் கொள்ளவே ஏலச்சீட்டுக்குப் பணம் கட்டினோம். 150 க்கும் மேற்பட்டோா் ரூ. 20 கோடி வரை கட்டியுள்ளோம். தற்போது அந்தப் பணத்தை திரும்பப் பெற முடியாமல் ஏமாந்துள்ளோம். எனவே எங்களுடைய பணத்தை எங்களுக்கு மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.