மணப்பாறையில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடந்த சில நாள்களாக பெட்ரோல் - டீசல் விலை ஏற்றத்துடன் இருந்து வருவதைக் கண்டித்து தபால் நிலையம் முன்பு காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மணப்பாறையில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடந்த சில நாள்களாக பெட்ரோல் - டீசல் விலை ஏற்றத்துடன் இருந்து வருவதைக் கண்டித்து தபால் நிலையம் முன்பு காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையிலும், மாவட்ட பொதுச்செயலாளர் செல்வா முன்னிலையிலும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய வட்டாரங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியில் நின்று, பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்தும், தினமும் ஏற்றம் பெறும் கலால் வரிவிதிப்பை கண்டித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை ஏழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com