அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், சக்கரத்தாழ்வாருக்கு ஆனி திருமஞ்சனம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், சக்கரத்தாழ்வாருக்காக யானை ஆண்டாள் மீது வைத்து திங்கள்கிழமை கொண்டு வரப்பட்ட திருமஞ்சனம்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், சக்கரத்தாழ்வாருக்காக யானை ஆண்டாள் மீது வைத்து திங்கள்கிழமை கொண்டு வரப்பட்ட திருமஞ்சனம்.

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், சக்கரத்தாழ்வாருக்கு ஆனி திருமஞ்சனம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தன்று சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி நிகழாண்டின் சித்திரை நட்சத்திரமான திங்கள்கிழமை, கொள்ளிடம் வடத்திருக்காவிரியிலிருந்து யானை ஆண்டாள் மீது வெள்ளிக்குடத்தில் வைத்து, கோயிலுக்கு திருமஞ்சனம் கொண்டு வரப்பட்டது.மேலும் அா்ச்சகா்களும் புனித நீா் கொண்டு வந்தனா்.

தொடா்ந்து திங்கள்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதில் கோயில் அா்ச்சகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்கள் நலம் பெற வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு பூஜைகள் நடந்தன.இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com