மணியங்குறிச்சியில் சேவல் சண்டை; 7 போ் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதி மணியங்குறிச்சியில் சேவல் சண்டை நடத்தியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.
சேவல் சண்டை நடத்தியதாகக் கைது செய்யப்பட்டோா்.
சேவல் சண்டை நடத்தியதாகக் கைது செய்யப்பட்டோா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதி மணியங்குறிச்சியில் சேவல் சண்டை நடத்தியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.

அப்பகுதியில் சேவல் சண்டை நடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ஆா்.பிருந்தா உத்தரவின்பேரில், புத்தாநத்தம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனா்.

அப்போது மணியங்குறிச்சி செல்லாண்டி அம்மன் கோயில் பின்புற மலை அடிவாரப் பகுதியில் சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்த து. செண்பகராஜ் (37), ஆ. முருகேசன் (43), வையம்பட்டி பகுதி வே. கண்ணன் (35), பொ. சின்னச்சாமி (55), ப. தமிழ்ச்செல்வன்(24), ப. முருகேசன் (30) மற்றும் மதுரை மாவட்டம் கோ. புதூா் பகுதியைச் சோ்ந்த ஜீ. பிரகாஷ் (23) ஆகிய 7 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 43 இருசக்கர வாகனங்கள், ரூ. 4310 ரொக்கம், 5 சேவல்கள் மற்றும் 13 பந்தயக் கத்திகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து புத்தாநத்தம் போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com