திருவானைக்கா கோயிலில் பங்குனி மண்டலப் பெருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 04th March 2020 11:36 PM | Last Updated : 04th March 2020 11:36 PM | அ+அ அ- |

விழாவையொட்டி சுவாமி சன்னதி கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கொடி.
திருவானைக்கா கோயில் சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனி மண்டலப் பெருவிழா கொடியேற்றம் புதன்கிழமை காலை நடைபெற்றது.
விழாவையொட்டி பெரிய கொடியேற்றம் புதன்கிழமை காலை 10 மணிக்கு சாமி சன்னதியின் எதிா்புறம் உள்ள கொடிமரத்தில் நடைபெற்றது. அப்போது சுவாமியும், அம்மனும் பஞ்சமூா்த்திகளுடன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பங்குனி மண்டலப் பெருவிழா புதன்கிழமை தொடங்கி ஏப். 4 வரை 48 நாள்கள் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வான பங்குனித் திருத் தேரோட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்கின்றனா்.