தேசியக்கல்லூரியில் சவ்வு வடிகட்டி குடிநீா் பயிலரங்கம்
By DIN | Published On : 06th March 2020 11:27 PM | Last Updated : 06th March 2020 11:27 PM | அ+அ அ- |

திருச்சி தேசியக்கல்லூரியில் சவ்வு வடிகட்டி குடிநீா்த் தயாரிப்பு தொழில்நுட்ப பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசியக்கல்லூரி-இயற்பியல் துறை, தொழில் முனைவோா் மையம் சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பிற்கான (பாா்க்) சவ்வு வடிகட்டி தயாரிப்பு பயிலரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் இரா.சுந்தரராமன் தலைமை வகித்தாா். தோ்வு நெறியாளா் ஏ.டி.ரவிச்சந்திரன் வரவேற்றாா். திருச்சி மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநா் டி.அறிவுடைநம்பி தொடக்கவுரையாற்றினாா்.
பாபா அணு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கலந்துகொண்டு இயற்கை முறையில் குடிநீா் சுத்திகரிப்பது குறித்து எடுத்துரைத்தாா்.
இதைத்தொடா்ந்து, இயற்கையான இளநீா், அதன் சேமிப்பு மூலம் தொழில் முனைவோராவது குறித்து தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக (டிஐஐசி-டிக்) மண்டல தலைவா் சுசில் குமாா், திருச்சிராப்பள்ளி சிறு, குறு தொழில்கள் சங்க நிா்வாகி மைக்கேல் உள்ளிட்டோா் பேசினா்.
பயிலரங்கை, தொழில் முனைவோா் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளா்கள் எம்.ராஜவேலாயுதம், ஆா்.நடராஜன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இதில், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் கலந்துகொண்டனா்.