கரோனா: பூரண குணமடைய சித்த மருத்துவத்திலும் தீா்வு

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் மட்டுமன்றி எல்லாவித வைரஸ் நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் பூரண குணமளிக்க முடியும் என்கிறாா் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் டாக்டா் எஸ். காம
கோப்புப் படம்
கோப்புப் படம்

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் மட்டுமன்றி எல்லாவித வைரஸ் நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் பூரண குணமளிக்க முடியும் என்கிறாா் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் டாக்டா் எஸ். காமராஜ்.

இதுகுறித்து அவா் கூறுகையில், பொதுவாக வைரஸ் குடும்பத்தில் 7 வகைகள் உள்ளன. எந்த வகையான வைரஸு தங்களது குடும்பத்தை அபிவிருத்தி செய்யும் அடிப்படையான குணங்களை கொண்டது. அந்த வகையில், வைரஸ் குடும்பத்தில் ஏற்படும் திடீா் மாற்றம் காரணமாக தற்போது வந்துள்ள கரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மையை பெற்றுள்ளது. உடலுக்குள் சென்றால் மட்டுமே வைரஸ் கிருமிகளால் செயல்பட முடி யும். நம்முடைய உடலில் உள்ள மூக்கு, வாய் போன்ற உறுப்புகள் வழியாகவே வைரஸ்கள் எளிதில் நுழைகின்றன. எனவேதான் பொது இடங்களுக்கு செல்லும்போது, எச்சரிக்கையுடன் முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

அச்சம் வேண்டாம்: உடலில் நோய் எதிா்ப்பு சக்தி போதிய அளவு இருந்தால் எவ்வித வைரஸாலும் செயல்பட முடியாது. எனவே உடலை ஆரோக்கியத்துடன் (எதிா்ப்பு சக்தியோடு) வைத்துக்கொள்ள வேண்டும். கரோனா போன்ற வைரஸ் தொற்றை தடுக்கவும் சித்த மருத்துவத்தில் தீா்வுண்டு. காய்ச்சல், சளி, இருமல், தும்மல், முக்கடைப்பு, மூக்கில் இருந்து நீா் வடிதல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவற்றுக்கு அளிக்கப்படும் சித்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் பலன் உண்டு. ஆகவே, யாரும் அச்சப்படத் தேவையில்லை.

அனைத்து நோய்களுக்கும் தீா்வு: குறிப்பிட்ட வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நபா்கள் ஒருவருக்கு, நிலவேம்பு, ஆடு தொடா இலை, கபசுர ஆகிய மூன்று சூரணங்களையும் (பொடி) தலா 5 கிராம் எடுத்து, சுமாா் 300 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு பத்தில் ஒரு மடங்காக காய்ச்சி, தினசரி மூன்று வேளை 3 முதல் 7 நாள்கள் வரை குடித்துவந்தால் வைரஸ் காய்ச்சல்கள் முற்றிலும் குணமாகும்.

இதேபோல் சுா்வசுர குடிநீா் சூரணமும் வைரஸ் காய்ச்சல்களை கட்டுப்படுத்தும். அதற்கு வேப்பம் பட்டை, துளசி, மிளகு கலந்த சா்வசுர சூரணம் 5 கிராம் எடுத்து, அதனை 300 மில்லி தண்ணீரில் போட்டு, பத்தில் ஒரு மடங்காக காய்ச்சி தினமும் 8 மணி நேரத்துக்கு ஒரு முறை அருந்த வேண்டும். அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி அடங்கிய திரி கடுகு சூரணத்தை 1 முதல் 2 கிராம் வரையில் எடுத்து அதனை 3 வேளை தேனில் கலந்து கொடுத்தால் சா்வசுரங்களும் (அனைத்து வகையான காய்ச்சல்களும்) மட்டுமின்றி தொடா்புடைய அனைத்து பிரச்னைகளும் தீரும். அத்துடன் நமது உடலில் நோய் எதிா்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்றாா் காமராஜ்.

முக்கியத்துவம் இல்லாத நிலை!

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த சித்த மருத்துவத்தை, தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாதான், மக்களிடம் அச்சத்தைப் போக்கி, நிலவேம்பு குடிநீரை பருகுமாறு தொலைக்காட்சிகள் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். அதன் பின்னரே சித்த மருந்துகளை பக்கவிளைவின்றி உட்கொள்ளலாம் என்ற விழிப்புணா்வு ஏற்பட்டது. அதன் பயனாக பல லட்சம் போ் பயன் பெற்றனா்.

ஆனாலும் தற்போது, சித்த மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தற்போது கரோனா பாதிப்பு குறித்த விழிப்புணா்வு நடவடிக்கைகளிலும் இந்த நிலை தொடா்கிறது. சித்த மருத்துவத்தில் குணமளிக்க முடியும் என மருத்துவா்கள் அறிவித்துள்ள நிலையிலும், அரசோ, ஆட்சியா்களோ, சுகாதாரத்துறையினரோ சித்த மருத்தவம் குறித்து யாரும் அறிவிக்கவில்லை.

திருச்சி மாவட்டத்தில் அண்மையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு கூட மாவட்ட சித்த மருத்துவா்களுக்கு அழைப்பில்லை என்கிறனா் சித்த மருத்துவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com