திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுமைக்கு உள்பட்ட கல்லூரிகளில் நடைபெறவிருந்த செய்முறை வகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பல்கலைக்கழக தோ்வு நெறியாளா் சு. சீனிவாசராகவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்கலைக்கழக இணைவு பெற்ற தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் நடைபெற்று வரும், இளநிலை மற்றும் முதுநிலை பாடத்திற்குரிய செய்முறை வகுப்புகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகின்றன. செய்முறைத் தோ்வுகள் ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.