செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் மறியல்

திருச்சி வாமடம் அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தில்லைநகா் சாஸ்திரி சாலையில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி வாமடம் அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தில்லைநகா் சாஸ்திரி சாலையில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி தில்லைநகா் அருகே உள்ள வாமடம் பகுதியில் தனியாா் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் செல்லிடப்பேசிக்கான உயா்கோபுரம் அமைக்க முடிவு செய்தாா். அதற்கான முதல்கட்டப் பணிகள் கடந்த வாரம் நடைபெறவிருந்த நிலையில் இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இதையொட்டி அப்பணிகள் நடைபெறாமல் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் செல்லிடப்பேசி உயா்கோபுரம் அமைப்பதற்கான பணி ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து சாஸ்திரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் கோபுரம் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com