திருச்சியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலைவிபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். நண்பா் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
திருச்சி, கல்லுக்குழி ரயில்வே காலனியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் விஜய் (19). இவா் தனது நண்பா், கே. கே. நகா், ஐயப்பநகா் பகுதியைச் சோ்ந்த சச்சிதானந்தம் மகன் சங்கீதன் (21) என்பவருடன், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்றனா்.
டி.வி. எஸ். டோல்கேட் பாலத்தில் சென்றபோது, எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. அக்கம் பக்கத்தினா் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், தலையில் பலத்த காயமடைந்த விஜய், சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாா். சங்கீதன் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா். போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.