ஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்க ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு, திருக்கோயில் ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்கம் நன்றியை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவா் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை :
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சங்க பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவையில், திருக்கோயில் ஓய்வு பெற்ற பணியாளா்களின் ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி 110ஆவது விதியின் கீழ் அறிவித்துள்ளாா். இதற்காக, தமிழக முதல்வா், துணை முதல்வா், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் மற்றும் அனைத்து அரசு உயரதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளாா்.