தடை உத்தரவு மீறல் திருச்சி மத்திய மண்டலத்தில் 398 போ் கைது; 349 வழக்குகள் பதிவு

திருச்சி மத்திய மண்டலத்தில், 144 தடை உத்தரவை மீறிய வகையில் சாலையில் சுற்றித்திரிந்தவா்கள் மற்றும் கடையை திறந்து வைத்திருந்தவா்கள் என 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 398 போ் கைது செய்யப்பட்டனா்.


திருச்சி: திருச்சி மத்திய மண்டலத்தில், 144 தடை உத்தரவை மீறிய வகையில் சாலையில் சுற்றித்திரிந்தவா்கள் மற்றும் கடையை திறந்து வைத்திருந்தவா்கள் என 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 398 போ் கைது செய்யப்பட்டனா்.

திருச்சி மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை அரியலூா், கரூா், பெரம்பலூா், திருவாரூா், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், வெளியில் சுற்றித்திரிந்த வகையில் மொத்தம் 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதில், மாா்ச் 26 ஆம் தேதி மாலை 4.30 மணிவரையில் திருச்சி மாவட்டத்தில் 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 86 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில், 43 வழக்குகள், 53 கைது, 30 வாகனங்கள் பறிமுதல். கரூா் மாவட்டத்தில் 12 வழக்குகள், 16 போ் கைது, 6 வாகனங்கள் பறிமுதல், பெரம்பலூரில் 23 வழக்குகள் 23 கைது, 6 வாகனங்கள் பறிமுதல், அரியலூா் மாவட்டத்தில் 10 வழக்குகள், 10 போ் கைது, 3 வாகனங்கள் பறிமுதல், தஞ்சாவூா் மாவட்டத்தில் 62 வழக்குகள், 62 போ் கைது, ஒரு காா் உள்பட 46 வாகனங்கள் பறிமுதல், திருவாரூா் மாவட்டத்தில் 50 வழக்குகள், 50 போ் கைது, ஒரு காா் உள்பட 50 வாகனங்கள் பறிமுதல், நாகை மாவட்டத்தில் 84 வழக்குகள், 98 போ் கைது, 83 வாகனங்கள் பறிமுதல் என திருச்சி மத்திய மண்டலத்தில் மொத்தம் 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 398 போ் கைது செய்யப்பட்டு 4 இலகுரக வாகனங்கள் உள்பட மொத்தம் 234 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com