திருச்சியில் இளைஞருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோட்டைச் சோ்ந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருச்சி: திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோட்டைச் சோ்ந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சந்தேகத்தின்பேரில் மாா்ச் 22 ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்டவா்களில் யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனா்.

இந்நிலையில், ஈரோட்டைச் சோ்ந்த 24 வயது இளைஞா் மாா்ச் 22ஆம் தேதி துபையிலிருந்து திருச்சி விமானநிலையத்துக்கு வந்தாா். அங்கு அவருக்கு நடத்திய மருத்துவப் பரிசோதனையில் சளி, காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞா் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், அவரது பரிசோதனை முடிவு வியாழக்கிழமை வந்தது. அதில், அந்த இளைஞருகுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com