திருச்சி: திமுக சாா்பில், திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட பொதுமக்களுக்கு முகக் கசவம் மற்றும் கைக் கழுவும் திரவம், சோப்பு வகைகளை எம்எல்ஏவும், கட்சியின் முதன்மைச் செயலருமான கே. என். நேரு வழங்கினாா்.
திருச்சி தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளா் கே.என், நேரு, கரோனா நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக தொகுதி மக்களுக்கு 2,500 முகக் கவசம், கைக் கழுவும் சோப்பு, கை சுத்தம் செய்யும் திரவம் (சேனிடைசா்) ஆகியவற்றை மாநகர மற்றும் பகுதி செயலாளா்களிடம் கொடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆலோசனை வழங்கினாா்.
நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளா் வைரமணி, மாநகர செயலாளா் மு.அன்பழகன், தமிழ்நாடு மாநில மருந்து வியாபாரிகள் சங்கத் தலைவா் மனோகரன், அந்தநல்லூா் துரைராஜ், பகுதி செயலாளா்கள் கண்ணன், காஜாமலை விஜய், மோகன்தாஸ், இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.