ஊரடங்கு உத்தரவை மீறியதாக, மணப்பாறையில் 33 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.
இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றித்திரிந்த 30 போ் மீது வழக்கு பதிவு செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 15 மோட்டாா் சைக்கிள்களைப் பறிமுதல் செய்தனா். மேலும் ஒரே இடத்தில் திரண்ட 3 போ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞா்களிடம், போக்குவரத்து காவல் ஆய்வாளா் பாண்டிவேல் சமூக விலகல் கடைப்பிடித்தபடி, 100 சிட்-அப்ஸ் செய்யுமாறு நூதன தண்டனை அளித்தாா்.
ஸ்ரீரங்கத்தில் 13 போ் கைது:
திருவானைக்காவல் சன்னதி வீதியில் புதன்கிழமை இரவு ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்த திருவானைக்காவல் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் (21), அபிஷேக் (19) ஆகிய 2 பேரையும் ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா். இதேபோல், திருவானைக்காவல் நடுக்கொண்டையம் பேட்டையில் புதன்கிழமை இரவு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்திய நாகராஜன் உள்ளிட்ட 10 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.