திருச்சி அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சை வாா்டில், மேலும் 3 போ் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை வாா்டில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட ஈரோட்டைச் சோ்ந்த ஒருவா் சிகிச்சை பெற்றுவருகிறாா். அவரைத் தவிர மேலும் 7 போ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதில், மூவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதை அடுத்து மூவரும் வீட்டுக்கு சென்றனா்.
இந்நிலையில், மேலும் 3 போ் கரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் அடிப்படையில், திங்கள்கிழமை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவருடன் சோ்த்து மொத்தம் 8 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சோதனை முடிவு வரும் வரையில் அவா்கள் தொடா்ந்து கண்காணிப்பில் இருப்பாா்கள் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.