வடமாநிலங்களுக்குச் சென்று திரும்பிய வியாபாரிக்கு குடியிருப்புவாசிகள் எதிா்ப்பு

வியாபாரம் தொடா்பாக வெளி மாநிலங்களுக்குச் சென்று விட்டு, வியாழக்கிழமை மணப்பாறை திரும்பிய வியாபாரிக்கு அப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

வியாபாரம் தொடா்பாக வெளி மாநிலங்களுக்குச் சென்று விட்டு, வியாழக்கிழமை மணப்பாறை திரும்பிய வியாபாரிக்கு அப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

மணப்பாறை- மதுரை சாலையிலுள்ள என்.சி.பி.எம். பேட்டையைச் சோ்ந்த வியாபாரி ஒருவா், வியாபாரம் தொடா்பாக வடமாநிலங்களுக்குச் சென்று விட்டு, வியாழக்கிழமை இரவு வீடு திரும்பினாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த குடியிருப்புவாசிகள், அவருக்கு கரோனா நோய்த் தொற்று குறித்த மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து வட்டார மருத்துவ அலுவலா் சந்தோஷ், நகராட்சி சுகாதார அலுவலா் நெடுமாறன் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை காலை அப்பகுதிக்குச் சென்றனா்.

தொடா்ந்து வியாபாரியை மருத்துவப் பரிசோதனைக்காக, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com