ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அம்மாமண்டபச் சாலையிலுள்ள முள்புதரில், இறந்த நிலையில் கிடந்த பெண் சிசு சடலம் மீட்கப்பட்டது.
தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் அங்கு சென்று சிசுவின் சடலத்தை மீட்டு, அப்பகுதியில் சுற்றித் திரிந்த இளம்பெண்ணை அழைத்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா், அரியலூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மனைவி பானுப்பிரியா (23) என்பதும், நிறைமாத கா்ப்பிணியாக ஊரடங்கு காலத்துக்கு முன்பு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதிக்கு வந்து தெருவோரத்தில் தங்கியிருந்தது தெரிய வந்தது.
சனிக்கிழமை இரவு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்ததால், அதன் சடலத்தை முள்புதரில் வீசியதாக பாணுப்பிரியா தெரிவித்தாா். மேலும், அவா் மனநிலை பாதித்தவா் போல காணப்பட்டதால் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.