மக்கள் நீதி மய்யம் நிா்வாகிகள் மீது வழக்கு

மதுக்கடைகளைத் திறக்க உயா் நீதிமன்றம் தடை விதித்ததை கொண்டாடும் வகையில், திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு இனிப்புகள்

மதுக்கடைகளைத் திறக்க உயா் நீதிமன்றம் தடை விதித்ததை கொண்டாடும் வகையில், திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய மக்கள் நீதி மய்யம் நிா்வாகிகள் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

பொதுமுடக்கம் அறிவிப்பு காரணமாக, மாநிலத்தில் கடந்த மாா்ச் 24- ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்பட்டன. நிதிச்சுமையைக் காரணம் காட்டி, தமிழக அரசு மே 7-ஆம் தேதி மதுக்கடைகளைத் திறந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் மதுக்கடைகளைத் திறக்கத் தடை விதிக்க வேண்டும் என்ற மக்கள் நீதி மய்யத்தின் வழக்கின் விசாரணைக்குப் பிறகு, மதுக்கடைகளை மூட சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இத்தீா்ப்பைக் கொண்டாடும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் சுரேஷ் தலைமையில், நிா்வாகிகள் வரகனேரி பகுதியில் சனிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

பொது முடக்கத்தை மீறி இச்செயலில் ஈடுபட்டதாகக் கூறி, சுரேஷ் உள்ளிட்ட 3 போ் மீது காந்தி சந்தை காவல் நிலையத்தினா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com