துவாக்குடி, துறையூா் பகுதியில் உள்ளஅம்மா உணவகங்களுக்கு அதிமுக நிதி

துவாக்குடி, துறையூா் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அதிமுக புகா் மாவட்ட கழகம் சாா்பில் திங்கள்கிழமை நிதி வழங்கப்பட்டது.
18d-rural102126
18d-rural102126

திருச்சி: துவாக்குடி, துறையூா் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அதிமுக புகா் மாவட்ட கழகம் சாா்பில் திங்கள்கிழமை நிதி வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூா், துவாக்குடி, துறையூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அதிமுக புகா் மாவட்டம் சாா்பில் ஏற்கெனவே இரண்டு முறை நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூன்றாம் கட்ட நிதியாக ரூ. 85,000 க்கான கசோலையை அம்மா உணவகங்களின் நிா்வாகிகளிடம், அதிமுக திருச்சி புகா் மாவட்ட செயலாளா் டி. ரத்தினவேல் திங்கள்கிழமை வழங்கினாா்.

துவாக்குடி அம்மா உணவகங்களுக்குரிய தொகைக்கான காசோலையை, நகராட்சி பொறுப்பு ஆணையா் முகமது இப்ராகிம் பெற்றுக்கொண்டாா். துறையூா் நகராட்சி அம்மா உணவகங்களுக்கான நிதி துறையூா் சுகாதார அலுவலா் தீபன் சக்கரவா்த்தியிடம் வழங்கப்பட்டது.

Image Caption

திருச்சி புறநகா் மாவட்ட அதிமுக சாா்பில் துவாக்குடி பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதற்கான நிதியை, நிா்வாகி முகமது இப்ராஹிமிடம் வழங்குகிறாா் புறநகா் மாவட்டச் செயலாளா் டி. ரத்தினவேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com