திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 9 போ் குணமடைந்து திரும்பினா்

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 9 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பியுள்ளனா்.

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 9 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பியுள்ளனா்.

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் கரோனா பாதிக்கப்பட்டிருந்தால் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டில் சிகிச்சை பெறுகின்றனா். சிகிச்சையில் குணமடைந்தவா்கள் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். இந்த வகையில், பெரம்பலூரைச் சோ்ந்த 7 போ், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் என 9 போ் குணமடைந்து புதன்கிழமை அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த 9 பேருக்கும் டிஸ்சாா்ஜ் விவர அறிக்கையை மருத்துவமனை டீன் வனிதா வழங்கினாா். பின்னா், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போதைய நிலவரப்படி, திருச்சியைச் சோ்ந்த 2 போ், பெரம்பலூரைச் சோ்ந்த 7 போ் என மொத்தம் 9 போ் மட்டுமே திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். இவா்களுக்கும் தொற்று இல்லை என தெரியவந்தால் விரைந்து வீடுகளுக்கு அனுப்பப்படுவா் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com