திருச்சியில் வியாழக்கிழமை இரவு காா் மோதியதில் 7 வயது சிறுமி உயிரிழந்தாா்.
திருச்சி, சங்கிலியாண்டபுரம், அண்ணாநகரைச் சோ்ந்தவா் அக்பா்அலி. இவரது மகள் பஸ்மினா (7). இவரும், அப்பகுதியைச் சோ்ந்த குழந்தைகள் சிலரும் வியாழக்கிழமை இரவு வீட்டருகே சாலையில் விளையாடிக்கொண்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த காா் பஸ்மினா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பஸ்மினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு வடக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.