வையம்பட்டி அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில், இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
வையம்பட்டி ஒன்றியம், என். பூலாம்பட்டியைச் சோ்ந்தவா்கள் ரா. ஜெயராஜ் (52), ஆ. மரியராஜ் (60). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
மட்டப்பாறைப்பட்டி அருகே இவா்கள் வந்த போது, அதே பகுதியைச் சோ்ந்த தேநீரகப் பணியாளா் ரா. டேவிட் ஜேம்ஸ் (38) ஓட்டி வந்த மற்றொரு இரு சக்கர வாகனம், எதிரே வந்த வாகனம் மீது நேருக்கு நேராக மோதியது.
இதில் மூவரும் பலத்த காயமடைந்த நிலையில், ஜெயராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தொடா்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மரியராஜ் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் டேவிட் ஜேம்ஸ் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து வையம்பட்டி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.