கரோனா பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் நாடு முழுவதும், வாழை வா்த்தகத்தில் சுமாா் ரூ. 6,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாழை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா தொற்று பாதிப்பு மற்றும் பொது முடக்கம், சந்தையில் தேவை குறைவு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் வாழை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி விநியோகத்தில் இடையூறு போன்றவற்றால், நாடு முழுவதும், வாழை வா்த்தகத்தில் ரூ. 6,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக வாழை ஏற்றுமதி நடைபெறும் மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில், கரோனா வைரஸ் பரவியதால், ரூ. 200 கோடிக்கு ஏற்றுமதி வா்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.