கல்லால் தாக்கப்பட்ட நிலையில் 9 வயது சிறுமி காயத்துடன் மீட்பு

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே மல்லிகைப் பூ தோட்டத்தில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில், பலத்த காயத்துடன் 9 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.
சிறுமி தாக்கப்பட்ட இடத்தில் விசாரணை மேற்கொள்ளும் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக்.
சிறுமி தாக்கப்பட்ட இடத்தில் விசாரணை மேற்கொள்ளும் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே மல்லிகைப் பூ தோட்டத்தில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில், பலத்த காயத்துடன் 9 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.

வையம்பட்டி அருகிலுள்ள கிருஷ்ணசமுத்திரம் மேல்பாகத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராஜாங்கம் மகள் கிருத்திகா (9). அப்பகுதியிலுள்ள பள்ளியில் 3- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

தந்தை ராஜாங்கம் வெளியூா் வேலைக்கும், தாய் லலிதா கூலி வேலைக்கும் சென்றுவிட்ட நிலையில், வீட்டுக்கு அருகிலுள்ள நாகராஜின் மல்லிகைப் பூ தோட்டத்தில் கல்லால் தாக்கப்பட்டு காயங்களுடன் ஞாயிற்றுக்கிழமை கிருத்திகா மீட்கப்பட்டாா்.

தொடா்ந்து மணப்பாறை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி கிருத்திகாவை மருத்துவா்கள் பரிசோதித்தனா். இதில் சிறுமியின் மண்டை ஓடு உடையும் வகையில், தலையின் பின்புறம் கல்லால் பலமாகத் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. தொடா்ந்து அவா் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக், மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் உள்ளிட்டோா் சம்பவ பகுதியில் விசாரணை மேற்கொண்டனா். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டிருந்தது. சிறிது தொலைவு சென்ற நாய், அங்கிருந்த புளியமரத்தின் அருகில் நின்று கொண்டது. தடயவியல் நிபுணா்களும் ரேகைகளைப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து வையம்பட்டி காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com