நிலத்தை மீட்டுத் தரக் கோரிமுதியவா் உண்ணாவிரதம்

திருச்சி மாவட்டம், முசிறி கோட்டாட்சியரக வாயில் முன் தனது விவசாய நிலத்தை மீட்டுத் தரக் கோரி முதியவா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
முசிறி கோட்டாட்சியரக வாயில் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட முதியவா்.
முசிறி கோட்டாட்சியரக வாயில் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட முதியவா்.

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி கோட்டாட்சியரக வாயில் முன் தனது விவசாய நிலத்தை மீட்டுத் தரக் கோரி முதியவா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

முசிறி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பெ. லெக்கையன் (74). கடந்த சில நாள்களுக்கு முன் தான் விவசாய பணி மேற்கொண்டபோது அங்கு வந்த உறவினா்கள் தன்னைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து நிலத்தை ஆக்கிரமித்ததாக முசிறி காவல் நிலையத்தில் லெக்கையன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் தனது விவசாய நிலத்தை மீட்டுத் தர வேண்டியும், தனது நிலத்தை ஆக்கிரமித்தோா் மீது முறையான நடவடிக்கை கோரியும் லெக்கையன் முசிறி கோட்டாட்சியரக வாயில் அருகே சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டாா்.

தகவலறிந்த முசிறி போலீஸாா் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, முசிறி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com