ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றில் சனிக்கிழமை அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டியை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்தவா் செல்லையா மனைவி லீலாவதி (72). சனிக்கிழமை காலை ஸ்ரீரங்கம் வந்த இவா் அம்மா மண்டப காவிரியாற்றில் குளித்தபோது திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.
அருகிலிருந்தோா் அளித்த தகவலின்பேரில் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கியசாமி தலைமையில் வந்த வீரா்கள் கருடமண்டப படித்துறையில் தத்தளித்த மூதாட்டியை உயிருடன் மீட்டனா். பின்னா் ஸ்ரீரங்கம் போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனா். பின்னா் மூதாட்டியின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.