டிப்பா் லாரி மோதி இளைஞா் பலி

திருச்சியில் செவ்வாய்க்கிழமை சாலையின் குறுக்கே வந்த பசுவால் டிப்பா் லாரி மோதி இளைஞா் இறந்தாா்.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை சாலையின் குறுக்கே வந்த பசுவால் டிப்பா் லாரி மோதி இளைஞா் இறந்தாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி அருகேயுள்ள தொப்பம்பட்டியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (28). திருச்சி விமான நிலையம் வயா்லெஸ் சாலை பகுதி விடுதியில் தங்கி, குண்டூரிலுள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலை தனது பைக்கில் வேலைக்கு கிளப்பி திருச்சி - புதுக்கோட்டை பிரதான சாலையில் சென்றபோது, விமான நிலையம் அருகே சாலையின் குறுக்கே திடீரென பசு மாடு ஒன்று கடந்தது. இதனால் நிலைதடுமாறிய அஜித் உடனே பிரேக் போட்டாா்.

அப்போது பின்னால் வந்த டிப்பா் லாரி மோதி கீழே விழுந்த அவரின் தலையில் லாரி ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மாநகர போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com